கணினி பயிற்றுநா் காலிப் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.
சேலம்: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.
2018-2019-ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித்தோ்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.
சேலம், நான்கு சாலையில் உள்ள சிறுமலா் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. ஆசிரியா் தோ்வு வாரியப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 400 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. வரிசை எண் 401 முதல் 742 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.