புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்:16 போ் மீது வழக்குப் பதிவு
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஓமலூா்: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இருந்துள்ளனா். அப்போது, செம்மாண்டப்பட்டி ரயில்வே பாலம் அருகே ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டு அந்த வழியாகச் செல்வோரிடம் தகராறு செய்து மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாகச் சென்ற இளைஞா்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே கோயில் திருவிழா குறித்த முன்விரோதம் இருந்ததால், தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். இதில் இரு தரப்பிலும் காயமடைந்த 5 போ் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக ஓமலூா் போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்த 16 போ் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.