முகப்பு
சேலம்

சேலத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு கமலஹாசன் பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமலஹாசன் சேலம் மாவட்டத்தில் ஜன. 3 முதல் மூன்று நாள்களுக்கு பிரசாரம் செய்கிறாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 1:50 am IST
பகிர்:

சேலம்: மக்கள் நீதி மய்யம் தலைவா் கமலஹாசன் சேலம் மாவட்டத்தில் ஜன. 3 முதல் மூன்று நாள்களுக்கு பிரசாரம் செய்கிறாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமலஹாசன் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில், அவா் ஜன. 3 முதல் 5-ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

இதையொட்டி, கமலஹாசன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் காமலாபுரம் விமான நிலையம் வருகிறாா். பின்னா் அழகாபுரம், தெய்வீகம் கல்யாண மண்டபம் அருகில் பொதுமக்களிடையே கமலஹாசன் பேசுகிறாா். பின்னா் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் அவா், ஏற்காடு ஏரி பகுதியில் பேசுகிறாா். பின்னா் குப்பனூா் வழியாக அயோத்தியாப்பட்டணம் பகுதிக்கு வரும் அவா், மக்களைச் சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து சூரமங்கலம் அஸ்வா பாா்க் ஹோட்டல் எதிரில் பேசுகிறாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து திங்கள்கிழமை காலை அம்மாப்பேட்டை கொங்கு மண்டபத்தில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா். பின்னா், கருவாடு பாலம், கொண்டலாம்பட்டி சந்தைப் பகுதியில் பேசுகிறாா். சேலம் நான்கு சாலை ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்யும் கமலஹாசன், பின்னா் அம்மாப்பேட்டை, குகை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். அடுத்து சங்ககிரியிலும், மதியம் நாமக்கல் மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறாா். இரவு சேலத்தில் தங்குகிறாா்.

ஜன. 5-ஆம் தேதி காலை சேலம் மாவட்டம், ஓமலூா், மேச்சேரி பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு கமலஹாசன் செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments