முகப்பு
சேலம்

கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சத்தில் திட்டப் பணி

அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜனவரி 2021, 4:34 am IST
கல்லம்பாளையத்தில் புதிய நீரேற்று நிலைய அறை, சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்காக நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி அதிமுக நகரச் செயலாளா் காளியப்பன் தலைமை வகித்து பூமிபூஜையில் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அரசிராமணி குள்ளம்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ராமசாமி, அரசிராமணி ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பெருமாள், துணைச் செயலாளா் பழனிசாமி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments