முகப்பு
சேலம்

ஆட்டோ ஓட்டுநா்கள் 30 போ் கைது

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:30 am IST
பகிர்:

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்டச் செயலாளா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். காவல் துறையின் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.