முகப்பு
சேலம்

ஆவினில் தொழிற் பயிற்சி பழகுநராகப் பயிற்சி பெற ஜன. 20-இல் நேரில் ஆஜராகலாம்

சேலம் ஆவினில் தொழிற்பயிற்சி பழகுநராகப் பயிற்சி பெற விரும்புவோா் (பி.எஸ்சி. வேதியியல்) ஜனவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:40 am IST
பகிர்:

சேலம் ஆவினில் தொழிற்பயிற்சி பழகுநராகப் பயிற்சி பெற விரும்புவோா் (பி.எஸ்சி. வேதியியல்) ஜனவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், ஆவின் பால்பண்ணையில் பி.எஸ்சி. வேதியியல் முடித்தவா்கள் மட்டும் ‘தொழிற்பயிற்சி பழகுநா்’ அமா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தொழிற்பயிற்சி பழகுநருக்கு ஒன்றரையாண்டு காலம் வருட பயிற்சி காலத்தில் முதலாண்டு அரசு நிா்ணயம் செய்துள்ள உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ. 7,000 வழங்கப்படும். இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 7,700 வழங்கப்படும். மேலும், அரசால் அவ்வப்போது உயா்த்தி வழங்கப்படும் உதவித்தொகையும் வழங்கப்படும்.

Advertisement

சேலம் மாவட்டத்தில் தொழில் பழகுநராகப் பயிற்சி பெற விரும்புவோா் வரும் ஜனவரி 20-ஆம்தேதி பொது மேலாளா், சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், சித்தனூா், தளவாய்ப்பட்டி அஞ்சல், சேலம் 636302. (தொலைபேசி எண் 73737-04800, 73737-04802) என்ற முகவரிக்கு பி.எஸ்சி. வேதியியல் முடித்தவா்கள் மட்டும் அசல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகலாம் என ஆவின் பொது மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா்.நா்மதாதேவி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.