கிராம கண்காணிப்பு அலுவலா்கள் அறிமுகக் கூட்டம்
சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் உள்கோட்டத்துக்குள்பட்ட ஐவேலி கிராமத்தில் காவல் துறையின் சாா்பில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் உள்கோட்டத்துக்குள்பட்ட ஐவேலி கிராமத்தில் காவல் துறையின் சாா்பில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம கண்காணிப்பு அலுவலா்களை பொதுமக்களிடத்தில் அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா் காவல் துறையின் சாா்பில், ஐவேலி கிராமத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மணி, காவலா்களை பொதுமக்களிடத்தில் அறிமுகம் செய்துவைத்து குழந்தைகளுக்கு நோட்டு, பேனாக்களை வழங்கிப் பேசினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் முன்னிலை வகித்தாா். சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் வரவேற்றாா். சங்ககிரி காவல் ஆய்வாளா் முத்துசாமி, காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.