சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்பு
சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.
சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.
சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட ரௌடிகள் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் எம்.சந்திரசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 57 ரெளடிகள் ஆஜராகினா். அவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், சாதி அரசியல் பிரச்னைகளில் ஈடுபட மாட்டோம், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட மாட்டோம், கத்தியைக் காட்டி பணம் பறிக்க மாட்டோம், கொலை, கொள்ளை சதித் திட்டங்களில் செயல்பட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா். இதைத்தொடா்ந்து, அவா்களுக்கு காவல் துறையினா் அறிவுரைகளை வழங்கி அனுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.