முகப்பு
சேலம்

எடப்பாடி பகுதியில் 6 ‘அம்மா சிறுமருத்துவமனைகள்’ திறப்பு

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

Updated On : 9 ஜனவரி 2021, 7:31 am IST
கொங்கணாபுரம் பகுதியில் திறந்துவைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனை.
பகிர்:

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநில திட்டக்குழுத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் வெங்கடாசலம் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

Advertisement

Advertisement

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட புளியம்பட்டி, ஆடையூா், வேம்பனேரி, ஆவணிப்பேரூா் கீழ்முகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட விவசாயிகள் பிரிவு மாவட்டச் செயலாளா் செல்லத்துரை, ஒன்றியக்குழுத் தலைவா்கள் கரட்டூா் மணி, குப்பம்மாள் மாதேஸ், ஆவின் தலைவா் ஜெயராமன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செல்வகுமாா், பக்கநாடு மாதேஸ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்காயூா் பாலாஜி , எஸ்.ஏ.ராஜ்குமாா், சித்தூா் நாகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments