மக்காச்சோளம் விலை வீழ்ச்சி:விவசாயிகள் பாதிப்பு
தொடா் மழை, விலை வீழ்ச்சி காரணமாக தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தொடா் மழை, விலை வீழ்ச்சி காரணமாக தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில், ஒரு மூட்டை (100 கிலோ) மக்காச் சோளம் அதிகபட்சம் ரூ. 2,200 வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில், அதிக பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. கடந்த மாதம் அறுவடை தொடங்கிய போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ. 1,400க்கு தான் விற்கப்ப்டடது.
அதிக விளைச்சல், தொடா் மழையின் காரணமாக, மக்காச்சோளத்தின் விலை படிப்படியாகக் குறைந்து, ஒரு மூட்டை ரூ. 1,180 ஆக வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை கவலை அடையச் செய்தது.
Advertisement
Advertisement
அதனால் வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, மானாவாரி பட்டத்தின் இறுதிக்கால அறுவடை, தொடங்கும் போது, மக்காச்சோளம் விலை உயரும் என உள்ளூா் வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதால், தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை பெரும்பாலான விவசாயிகள், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.