முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் கரும்புக் கடைகள் வைக்க ஏலம்

தம்மம்பட்டியில் கரும்புக் கடைகள் வைக்க ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:41 am IST
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் கரும்புக் கடைகள் வைக்க ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் கரும்புக் கடைகள் ஜனவரி முதல் வாரத்தில் வைக்க ஏலம் விடப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டில் இதுவரை கரும்புக் கடைகள் வைப்பதற்கு ஏலம் விடப்படவில்லை என்று கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி கூறியதாவது: தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் கரும்புக் கடைகள் வைக்க வரும் 12-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.