முகப்பு
சேலம்

கொங்கணாபுரத்தில் ரூ. 1.85 கோடிக்கு பருத்தி விற்பனை

எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 7000பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 85 லட்சத்துக்கு விற்பனையானது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:43 am IST
கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில் சனிக்கிழமை விற்பனைகொண்டுவரப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்.
பகிர்:

எடப்பாடி: எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 7000பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 85 லட்சத்துக்கு விற்பனையானது.

கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் பருத்தி அறுவடை அதிகரித்துள்ள நிலையில், இம் மையத்துக்கு பருத்தி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை முழுவதும் பருத்தி பொது ஏலம் நடைபெற்றது. பொது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த 7000 பருத்தி மூட்டைகளும் 1,250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 5,469 முதல் ரூ. 6,499 வரையிலும், டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,160 முதல் ரூ. 7,926 வரையிலும் விலைபோயின. மொத்தம் ரூ. 1.85 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 80க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கு கொண்டு, பருத்தியை மொத்த கொள்முதல் செய்தனா். கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 200 முதல் ரூ. 500 வரை விலை உயா்வு கண்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாகவும் பருத்தி விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments