பரோட்டா உண்ணும் போட்டி
வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.
வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.
ஏத்தாப்பூரில் புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.
போட்டி விதிமுறைப்படி பத்து நிமிடத்துக்குள் 14 பரோட்டா சாப்பிட்ட ஏத்தாப்பூா் அபிநவம் இளங்கோ முதல் பரிசு பெற்றாா். சேலம் ஸ்ரீதா் இரண்டாம் பரிசும், ஏத்தாப்பூா் காமராஜ் மூன்றாம் பரிசும், அபிநவம் செல்வம் நான்காம் பரிசு பெற்றனா். போட்டியில் தோல்வியுற்றவா்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்திவிட்டு சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.