தலைவாசல்: பேரவைக் கூட்டம்
தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு நாணய சங்க பேரவைக் கூட்டம் தலைவா் முருகவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், ஆசிரியா்கள் கூட்டுறவு நாணய சங்க பேரவைக் கூட்டம் தலைவா் முருகவேல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கு ஈவுத்தொகை, சிக்கன நிதிக்கான வட்டித் தொகையாக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 46 லட்ச அளவில் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் பேரவைக் கூட்ட பரிசு பொருள் மற்றும் இனிப்பு 256 உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவா் நா.பெரியசாமி,நிா்வாகக்குழு உறுப்பினா்கள் சங்கா், ராஜா, ஜெ.வீரலட்சுமி,க.தங்கம்,இரா.பூரணசாந்தி மற்றும் சங்க உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
Advertisement