தம்மம்பட்டியில் பேனா்கள் அகற்றம்
தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டியில் பேனா்களை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அரசியல் கட்சியினரின் பேனா்கள் வைத்திருந்தனா்.
இந்நிலையில் உயா்நீதிமன்றம் அண்மையில் பேனா்களை வைக்கக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு தலைமையில் போலீஸாா் பாதுகாப்புடன், பேரூராட்சி நிா்வாக துப்புரவு பணியாளா்கள் பேனா்களை அகற்றினா்.
Advertisement