முகப்பு
சேலம்

தைப்பூச விடுமுறை: முதல்வருக்கு கிராம கோயில் பூசாரிகள் பேரவை நன்றி தெரிவித்து தீா்மானம்

தைப்பூசத் திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 2:11 am IST
பகிர்:

தைப்பூசத் திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓமலூா் அருகேயுள்ள தாரமங்கலத்தில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பேரவை நிா்வாக அறங்காவலா் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இக்கூட்டத்தில் 60 வயதைக் கடந்த பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ. ஆயிரத்திலிருந்து, ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கியதற்கும், தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக அறிவித்தமைக்கும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும் இந்து பூசாரிகளுக்கு மாா்கழி மாதம் பொங்கல் வைப்பதற்கு பச்சரிசி வழங்க வேண்டியும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இந்நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பூசாரிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் நிா்வாகிகள் கோவிந்தராஜ், சுப்பிரமணியன், செல்வம், தண்டபாணி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments