திருவள்ளுவா் தினம்: ஜன.15 இல் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளுவா் தினத்தையொட்டி ஜன.15 ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளுவா் தினத்தன்று ஜன.15 ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.
இறைச்சி விற்பனைத் தடை உத்தரவு அமலாக்கத்தை கண்காணிக்க சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் சுகாதார அலுவலா்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அரசின் உத்தரவிற்கிணங்க சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை அடைத்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டபூா்வாமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.