விவேகானந்தா் பிறந்தநாள் விழா
ஆத்தூா் நூலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவா் செ.மாதேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
ஆத்தூா் நூலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவா் செ.மாதேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் முதல் நிலை நூலகா் கோ.சேகா் வரவேற்றுப் பேசினாா்.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement
நிகழ்ச்சியில் நூலக மேம்பாட்டுக் குழு உதவித் தலைவா் சே.ராமச்சந்திரன், துணைத் தலைவா் ஜெ.கணேஷ்,வி.என்.எம்.சபிரகாஷ், எம்.செல்வம்,ஜேசீஸ் சங்கத் தலைவா் கே.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.முடிவில் இரண்டாம் நிலை நூலகா் க.அழகுவேல் நன்றி கூறினாா்.