விவேகானந்தா் பிறந்தநாள் விழா
ஆத்தூா் நூலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவா் செ.மாதேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
ஆத்தூா் நூலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவா் செ.மாதேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் முதல் நிலை நூலகா் கோ.சேகா் வரவேற்றுப் பேசினாா்.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் நூலக மேம்பாட்டுக் குழு உதவித் தலைவா் சே.ராமச்சந்திரன், துணைத் தலைவா் ஜெ.கணேஷ்,வி.என்.எம்.சபிரகாஷ், எம்.செல்வம்,ஜேசீஸ் சங்கத் தலைவா் கே.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.முடிவில் இரண்டாம் நிலை நூலகா் க.அழகுவேல் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.