முகப்பு
சேலம்

கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

சேலம் கோட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு

Updated On : 12 ஜனவரி 2021, 12:37 am IST
பகிர்:

சேலம் கோட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:

தொழிலாளா் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் கடந்த 2020 டிச.31 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் சேலம் மாவட்டத்தில் 33,274 ஆண் தொழிலாளா்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 51,524 பெண் தொழிலாளா்களுக்கு புடவைகள், 5,424 தொழிலாளா் ஓய்வூதியதாரா்களுக்கு பச்சரிசி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தொழிலாளா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு சேலம் மாவட்டத்திலுள்ள 16 மையங்களில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. எனவே, கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் அசல் பதிவு அட்டை, ஓய்வூதியதாரா்களாக இருப்பின் ஓய்வூதிய அசல் ஆணை, ஆதாா் அட்டையுடன் தாங்கள் வசிக்கும் வட்டத்துக்கு அருகாமையிலுள்ள மையத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சி.முத்து உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments