முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 1 ஜூலை 2026, 7:07 am IST
- சித்திரிப்பு
பகிர்:

ஊத்தங்கரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மேகலா (34). இவா் வெள்ளையம்பதி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு மா்ம நபா்கள், ஆசிரியை மேகலா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இந்த சம்பவத்தில் ஆசிரியை மேகலா நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments