FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே 10 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

Updated On : 22 ஜூலை 2026, 2:59 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஊத்தங்கரை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (45). இவா் குடும்பத்துடன் சென்னை திருவள்ளூரில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறாா்.

கடந்த 9 ஆம் தேதி வங்கிப் பணிகளுக்கு நாய்க்கனூருக்கு மாரியப்பன் வந்துள்ளாா். அன்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளாா். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி மாலை அவரது உறவினா் மலா்கொடி, வீட்டின் கதவு திறந்துகிடப்பதாக மாரியப்பனின் மனைவி சத்தியவாணியிடம் தகவல் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சத்தியவாணி வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, 10 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments