சங்ககிரி வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி சிறப்பு பூஜைகள்
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாா்கழி 27-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் வசந்தவல்லி, வசந்த வல்லபராஜப் பெருமாள் சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் மாா்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் சங்ககிரி மலையில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.