முகப்பு
சேலம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மேட்டூரில் அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கோரி சி.ஐ.டி.யு. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:37 am IST
பகிர்:

மேட்டூரில் அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கோரி சி.ஐ.டி.யு. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுத் தொகுப்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மற்ற முறைசார தொழிலாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கைத்தறி, விசைத்தறி தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், தையல் தொழிலாளா்கள் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட 18 வகையான முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு. சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருப்பண்ணன் தலைமை வகித்தாா். தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா். ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments