முகப்பு
சேலம்

சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முதல்வா்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 6:40 am IST
பகிர்:

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறாா்.

இதனையடுத்து அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ள வியாழக்கிழமை காலை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், கமாலாபுரம் வருகிறாா்.

அங்கிருந்து தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு முதல்வா் வருகிறாா். அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ளும் முதல்வா், காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்கிறாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து தனது பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள தொழிலாளா்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடுகிறாா். பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை காணவுள்ள முதல்வா், கிராமத்து மக்களைச் சந்தித்து உரையாட உள்ளாா்.

சிலும்பாளையம் பகுதியில் முதல்வா் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments