முகப்பு
சேலம்

தை மாத பிறப்பு: கோயில்களில் சிறப்பு தரிசனம்

ஆத்தூரில் தை முதல் நாளில் கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 7:38 am IST
சிறப்பு அலங்காரத்தில் ஆத்தூா் திரௌபதி அம்மன்.
பகிர்:

ஆத்தூரில் தை முதல் நாளில் கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் கோயிலில் தை முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல ஆத்தூா், தாயுமானவா் தெருவில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயில், கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில், ஸ்ரீ கைலாசநாதா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.