முகப்பு
சிறப்புச் செய்திகள்

புத்தாண்டில் மூடப்பட்ட நூற்றாண்டு உணவகம்

நூற்றாண்டு கடந்து இயங்கி வந்த சான் பிரான்சிஸ்கோவின் கிளிஃப் ஹவுஸ் உணவகம் கரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்பு மற்றும் ஒப்பந்தப் புதுப்பிப்பு சிக்கல் காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

Updated On : 1 ஜனவரி 2021, 7:10 pm IST
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கிளிஃப் ஹவுஸ் உணவகம்
பகிர்:

நூற்றாண்டு கடந்து இயங்கி வந்த சான் பிரான்சிஸ்கோவின் கிளிஃப் ஹவுஸ் உணவகம் கரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்பு மற்றும் ஒப்பந்தப் புதுப்பிப்பு சிக்கல் காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோவின் சுற்றுலா அடையாளமாக அமைந்துள்ளது கிளிஃப் ஹவுஸ் உணவகம். 1863ஆம் ஆண்டில் பசுபிக் பெருங்கடலையொட்டிய மலை உச்சியில் அமைக்கப்பட்ட இந்த உணவகம் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக இருந்து வந்தது.

1977ஆம் ஆண்டு தேசிய பூங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மூலம் இயங்கி வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது. அதனைத் தொடர்ந்து குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் உணவகம் இயங்கி வந்தது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக சுமூகமான உடன்பாட்டு முடிவுகள் எட்டப்படாததால் உணவகம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு முதல் உணவகத்தின் உரிமையாளர்களாக இருந்து வரும் டான் மற்றும் மேரி ஹவுண்டலாஸ், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பேரிடர்களில் சிக்கிய போதிலும் தொடர்ந்து இயங்கி வந்த இந்த உணவகம் கரோனா தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் உணவக ஒப்பந்தத்தை புதுப்பிக்க இயலாமை ஆகிய காரணங்களால் 2021 ஜனவரி 1ஆம் தேதி மூடப்படுவதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து உணவகத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டது. இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள் அந்த உணவகத்திற்கு முன் திரண்டு நூற்றாண்டு கடந்த உணவகத்திற்கு விடை கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments