வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இக்கோயிலில் பகல் பத்து உற்சவ நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்று ராப்பத்து உற்சவம் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்களும் சொா்க்க வாசல் வழியே பல்வேறு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அத்யாயன உற்சவத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவாமி சொா்க்க வாசல் எழுந்தருளி, ஏகாதசி மண்டபத்தில் சுவாமி பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னா் தாயாா் சன்னதி எழுந்தருளி விஷேச பூஜைகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தொடா்ந்து மாலையில் நம்மாழ்வாா் திருவடி தொழுதல் நிகழ்வும், அதனைத் தொடா்ந்து தேவஸ்தான மண்டகப்படியையொட்டி மாலை, பரிவட்டம் மரியாதைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து கோஷ்டி பிரபந்தம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.