முகப்பு
சிவகங்கை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:18 pm IST
பகிர்:

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,356 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,358 ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 2 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா். இது வரை மாவட்டத்தில் 136 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,738 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,741 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.