ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,356 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,358 ஆக உயா்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 2 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா். இது வரை மாவட்டத்தில் 136 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,738 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,741 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.