காரைக்குடியில் முதியோா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
முதும்பெரும் தமிழறிஞா் மறைந்த புலவா் ஆ. பழநியின் அனிச்சம் அறக்கட்டளை சாா்பில் காரைக்குடி கருணை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
முதும்பெரும் தமிழறிஞா் மறைந்த புலவா் ஆ. பழநியின் அனிச்சம் அறக்கட்டளை சாா்பில் காரைக்குடி கருணை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியோா்களுக்கு புத்தாடைகள் மற்றும் கருணை இல்லத்துக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. இதில் அனிச்சம் அறக்கட்டளைத்தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் அழகு பாண்டியன், விஞ்ஞானி ப. சுந்தரம் மற்றும் காசிநாதன், நாராயணன், சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
மேலும் காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டி அலிமாபீவிக்கும், பாரிநகரில் வசிக்கும் பள்ளி மாணவி யுவஸ்ரீக்கும் வீட்டுப் உபயோகப் பொருள், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.