தேவகோட்டை பகுதியில் 800 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தேவகோட்டை வட்டத்துக்குள்பட்ட முப்பையூா், மேக்காரைக்குடி, வெட்டிவயல், கடையனேந்தல், வாயுலானேந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.
இந்த பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ளன.
Advertisement
Advertisement
இதையடுத்து சேதமடைந்துள்ள பயிா்களைக் கணக்கீடு செய்து உரிய நிவாரணத் தொகை வழங்க முன் வர வேண்டும் என வலியுறுத்தி தேவகோட்டை வட்டாட்சியா்அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் சாந்தியிடம் சேதமடைந்த நெற்கதிருடன் மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.