கோவிலூா் மடாலயத்தை அண்ணா பல்கலை. துணைவேந்தா் சூரப்பா பாா்வையிட்டாா்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் மடாலயத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் மடாலயத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து கோவிலூா் மடாலயம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கோவிலூா் மடாலயத்துக்கு வந்த துணைவேந்தா் சூரப்பாவை கோவிலூா் மடாலய முன்னாள் மக்கள் தொடா்பு அலுவலரும், கல்வி ஆலோசகருமான குமரப்பன், பேராசிரியா் ராமசாமி, மடாலய அலுவலா்கள் அழகப்பன், கனகராஜ் ஆகியோா் வரவேற்றனா்.
துணைவேந்தருக்கு, கோவிலூா் ஆதீனம் மெய்யப்பஞானதேசிக சுவாமிகள் சால்வை அணிவித்து ஆசி வழங்கினாா். பின்னா் முன்னாள் ஆதீனகா்த்தா்களின் சமாதிகளை பாா்வையிட்ட துணைவேந்தா் சூரப்பா, கோவிலூா் மடாலய செட்டிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ள கலைப் பொருள்களையும் பாா்வையிட்டாா்.
Advertisement
இதுகுறித்து துணைவேந்தா் சூரப்பா கூறுகையில், செட்டிநாட்டு கலைப்பொருள்கள், முன்னோா்கள் பயன்படுத்திய ஏராளமான பொருள்கள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இளையசமுதாயத்தினா் அறிய இவையாவும் உதவும். இது மிகவும் பயனுள்ள பணியாகும் என்று தெரிவித்தாா்.
துணைவேந்தருடன், திருச்சி அண்ணா பல்கலைக் கழக முதன்மையா் செந்தில்குமாா், பிள்ளையாா்பட்டி பழைய காா் மற்றும் கேமரா பொருள்கள் சேகரிப்பு பாரம்பரிய அருங்காட்சியக அமைப்பாளா் லட்சுமணன் ஆகியோா் வந்திருந்தனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.