கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மென்பொறியாளா் கவின் கொலை வழக்கு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின். மென்பொறியாளரான இவா், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இவ்வழக்கில் கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித், அவரது பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் விசாரணைக்காக திருநெல்வேலி மாவட்ட 2 ஆவது அமா்வு( வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 632 பக்க குற்றப்பத்திரிகை நகலை 4 பேருக்கும் தனித்தனியாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 23-க்கு ஒத்திவைத்தாா்.