ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து டேல் ஸ்டெய்ன் விலகல்
ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.
2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.
இந்நிலையில் ட்விட்டரில் ஸ்டெய்ன் கூறியதாவது:
Advertisement
Advertisement
அனைவருக்கும் சிறிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு விளையாடுவதிலிருந்து நான் விலகுகிறேன். வேறொரு அணிக்கு விளையாடவும் போவதில்லை. அச்சமயத்தில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இதுதொடர்பான புரிதலுக்காக ஆர்சிபிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மற்ற லீக்குகளில் விளையாடவுள்ளேன். நான் ஓய்வு பெறவில்லை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.