முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல்: கேரள அணியை வீழ்த்தி மும்பை முதலிடம்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது.

Updated On : 3 ஜனவரி 2021, 7:44 am IST
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 19 புள்ளிகளை எட்டிய மும்பை அணி, புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது.

கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. 3-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கோஸ்டா, பெனால்டி ஏரியாவில் மும்பை வீரா் ஹியூகோவை கீழே தள்ள, மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினாா் நடுவா். இதில் மும்பை வீரா் ஆடம் லீ ஃபான்ட்ரே எளிதாக கோலடித்தாா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் மும்பை வீரா் ஹியூகோ கோலடிக்க, மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு கேரள அணி பதிலடி கொடுக்கப் போராடினாலும் அது நடக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்று 19 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் கேரள அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 9-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments