பெண் குழந்தைக்குத் தந்தையானார் விராட் கோலி
அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமாக உள்ளார்கள்...
பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த வருடம் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கோலி கூறினார்.
முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்காவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார் விராட் கோலி.
Advertisement
Advertisement
இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை கோலி வெளியிட்டுள்ளார். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமாக உள்ளார்கள் என கோலி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.