முகப்பு
செய்திகள்

ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.

Updated On : 14 ஜனவரி 2021, 4:23 am IST
பகிர்:


மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிர் தகுதிச்சுற்று போட்டி, துபையில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஓல்கா டேனிலோவிச்சிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அங்கிதா.
கிராண்ஸ்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறுவதற்காக இதுவரை 6 முறை முயற்சித்தபோதும், அவையனைத்தும் அங்கிதா ரெய்னாவுக்கு தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இந்தியாவில் இருந்து சுமித் நாகல் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கிறார். அவருக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் வைல்ட்கார்டு (நேரடித்தகுதி) வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments