முகப்பு
விளையாட்டு

விளையாட்டை அரசியல் பாதிக்காது: சங்ககாரா

விளையாட்டில் அரசியல் கலப்பதால், அதன் வீரியம் பாதிக்கப்படாது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

Updated On : 2 ஏப்ரல், 2013 at 12:12 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

விளையாட்டில் அரசியல் கலப்பதால், அதன் வீரியம் பாதிக்கப்படாது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சங்ககாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் செய்தியாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியது:

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் விளையாட்டின் வீரியம் பாதிக்காது. எங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்றாலும்,  இந்தியாவின் பிற பகுதி ரசிகர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

Advertisement

பேட்டியின்போது அணியின் பலம் குறித்து அவர் கூறுகையில், அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினும், இந்தியாவின் இஷாந்த் சர்மாவும் உள்ளது பலம். கடந்த ஆண்டு எங்கள் அணி சர்மாவை இழந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்மா சிறப்பாகச் செயல்பட்டார். அதேபோல், கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டெயினின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. முதல் ஆட்டத்தில் ஷிகர் தவண் ஆடாதது ஏமாற்றமே. அவருக்குப் பதிலாக புதிய வீரர்கள் விளையாடுவர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.