உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா
பிரான்ஸில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது.
பிரான்ஸில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது.
போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, பலம் வாய்ந்த ஃபின்லாந்து அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது.
இந்திய வீரர் ரமீத் டாண்டன், தரவரிசையில் தன்னைவிட 196 இடங்களில் முன்னிலையில் உள்ள ஃபின்லாந்தின் ஹென்றிக் மஸ்டோனியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் மஸ்டோனி எளிதில் வென்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ரமீத் டாண்டன் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றார்.
Advertisement
மற்றொரு இந்திய வீரர் மகேஷ் மங்கான்கர், மாட்டியஸ் டுவோமியை வெற்றார். சர்வதேச தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள செüரவ் கோஷல், யோலி டுயோமினியை வென்றார்.
மூன்று வீரர்கள் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, வெனிசூலாவை எதிர்கொள்ள இருக்கிறது.