தமிழ்நாடு பேரவையில் ஆளுநர் உரை! - செய்திகள் நேரலை
ஆளுநர் உரை செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
முதல்வர் வருகை
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வருகை தந்துள்ளார்.
வாயை திறங்க சிஎம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ’வாயை திறங்க சிஎம்’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர்.
இபிஎஸ்ஸுக்கு 5-வது இருக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வரிசையில் 5-வது இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
விசிக கேள்வி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக, முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சா்ச்சை தொடருமா...?
சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.