சென்னையில் பலத்த காற்றுடன் மழை! வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
சேலம், கோவை, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களிலிருந்து சென்னை வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன.
Advertisement
Advertisement
மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Rain with strong winds in Chennai Plane service affected
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.