சென்னையில் பலத்த காற்றுடன் மழை! வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்
சென்னையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
சேலம், கோவை, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களிலிருந்து சென்னை வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன.
Advertisement
Advertisement
மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
summary