எஸ்பிஐ-யின் பயிற்சி நிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு!
எஸ்பிஐ-யின் பயிற்சி நிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி நிலை அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கியின் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட பணிதான் பயிற்சி நிலை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புதல்.
தேர்வு செய்யப்படுவோர் உரிய பயிற்சி கொடுத்து நாடு முபவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
Advertisement
Advertisement
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் என பலக்கட்டத் தேர்வுகளைக் கொண்டதாக தேர்வு முறை அமைந்திருக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பயில்வோரும் விண்ணப்பிக்கலாம்.
21 வயதுக்கு மேல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு உள்பட்ட பிரிவினருக்கு வயதில் தளர்வு அறிவிக்கப்படும்.
sbi.co.in என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI notification for Probationary Officer posts!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.