FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

தவெக அரசும் இப்படியா? குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

தவெக அரசும் இப்படி செய்தால் எப்படி என புலம்பும் வகையில் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Updated On : 23 ஜூன் 2026, 5:18 pm IST
குரூப் - 1 பணியிடங்கள்
பகிர்:

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வில் பங்குபெற ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டிருப்பதன் மூலம், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய மன நெருக்கடியை ஏற்படுத்தும்.

Advertisement

Advertisement

இதற்கு முன்பு, 70 அல்லது 90 காலிப் பணியிடங்களுக்காக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதுவே இளைஞர்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதுவார்கள். இந்த முறை அதனை விடவும் குறைவாக வெறும் 26 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியிருப்பது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், துணைப் பதிவாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாக, ஆண்டு திட்ட அட்டவணைப்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமும் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments