ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரில் மெதுவாக ஓவர் வீசியதற்காக ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக கொல்கத்தா அணி கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபில் தொடருக்கான போட்டிகள் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 14 நகர்களில் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற லீக் சுற்றின் 22-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
Advertisement
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 192 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
ஐபிஎல் விதிகளின்படி நிர்ணயித்த நேரத்தைக் காட்டிலும் கூடுதலானதால், மெதுவாக ஓவர் வீசியதற்காக கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றியாக அமைந்தது. இதுவரை இந்தத் தொடரில் வெற்றி பெறாத மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வி, ஒரு முடிவில்லை என்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா.