ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் அதிகபட்சமாக 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் அக்ஷர் படேல் 39 ரன்களும், டேவிட் மில்லர் 28 ரன்களும் எடுத்தனர். சஹில் பரேக் 24 ரன்கள், அபிஷேக் போரெல் 22 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய் சௌரப் துபே 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அனுகுல் ராய், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.
தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றியுடன் இந்த ஐபிஎல் தொடரை நிறைவும் செய்யும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன.