கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேப்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரானப் போட்டியில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, அந்தப் போட்டியில் வெற்றி பெற்று, தில்லிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா நைடர்ஸ் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தால் அந்த அணிக்கு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், பஞ்சாப் கிங்ஸைக் காட்டிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
In the IPL match against the Delhi Capitals, the Kolkata Knight Riders won the toss and elected to bowl.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.