குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
Advertisement
குயிண்டன் டி காக் சதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெற்ற குயிண்டன் டி காக் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, நமன் திர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹார்திக் பாண்டியா 14 ரன்கள் எடுத்தார். ரியான் ரிக்கல்டான் 2 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 0 ரன், திலக் வர்மா 8 ரன்கள், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஒரு ரன் எடுத்து ஏமாற்றமளித்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கோ யான்சென் மற்றும் ஷஷாங் சிங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.