நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
Advertisement
நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக நமன் திர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரியான் ரிக்கல்டான் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள், கேப்டன் ஹார்திக் பாண்டியா 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
சிஎஸ்கே தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அன்ஷுல் கம்போஜ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளையும், ராமகிருஷ்ணா கோஷ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.