டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் அகமதாபாதில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த அணி முதலில் பேட் செய்கிறது.
தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ யான்சென் மீண்டும் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.