7 நாள்களாகத் தாயகத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்!
சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் குறித்து...
போர்ச் சூழலால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தாயகத்துக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் இருந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியினர வெளியேறியும் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கி வருகிறார்கள்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றதால், மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
Advertisement
Advertisement
இந்தத் தோல்விக்குப் பிறகு, சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத அளவுக்கு விமானங்கள் பலதும் ரத்து செய்யப்பட்டன. ஈரான் - இஸ்ரேல் போரின் காரணமாக இந்தியாவிலேயே தங்கிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி ஒவ்வொரு நாளும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இன்னும் 24 மணி நேரத்தில் வீரர்கள் தாயகத்துக்கு திரும்புவார்கள் என சிடபுள்யூஐ (கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்) தெரிவித்துள்ளது.
ஏழாவது நாளில் சமி அமைதியாகிவிட்டார் என ரசிகர் கிண்டலாகப் பதிவிட அதற்குப் பதிலளித்த சமி, “மகிழ்ச்சி வருகிறதென நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஐசிசியும் இந்த விஷயத்தில் தலையிட்டு, பல்வேறு நாடுகளுடன் பேசி வந்தது. பல வளைகுடா நாடுகளில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தாமதம் எனக் கூறப்பட்டுள்ளது.
Daren Sammy desperately waiting for 'joy to come' as West Indies remain stuck in India after exit t20 world cup 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.