சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் அக்டோபரில் தொடக்கம்!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வாட்சன், யுவராஜ் சிங் மற்றும் குமார் சங்ககாரா பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
போட்டிகள் அனைத்தும் மும்பை, வதோதரா மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளன. இரண்டாவது சீசனில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கின்றன.
Advertisement
Advertisement
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் குறித்து அதன் தலைவர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் சீசன் சிறப்பாக அமைந்தது. முதல் சீசனைப் போன்றே இரண்டாவது சீசனும் ரசிகர்களுக்கு எண்ணற்ற நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறது. ரசிகர்கள் அவர்களது ஹீரோக்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க ஆவலோடு இருக்கின்றனர். இந்த சீசனும் மிகவும் சிறந்த சீசனாக அமையும் என்றார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது டி20 லீக் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
The International Masters League cricket series will begin in October.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.