முகப்பு
கிரிக்கெட்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் அக்டோபரில் தொடக்கம்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.

Updated On : 20 மார்ச் 2026, 5:11 pm IST
முதல் சீசன் அறிமுக விழாவில்... - படம் | சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (எக்ஸ்)
பகிர்:

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.

லெஜண்டரி கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வாட்சன், யுவராஜ் சிங் மற்றும் குமார் சங்ககாரா பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.

போட்டிகள் அனைத்தும் மும்பை, வதோதரா மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளன. இரண்டாவது சீசனில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கின்றன.

Advertisement

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் குறித்து அதன் தலைவர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் சீசன் சிறப்பாக அமைந்தது. முதல் சீசனைப் போன்றே இரண்டாவது சீசனும் ரசிகர்களுக்கு எண்ணற்ற நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறது. ரசிகர்கள் அவர்களது ஹீரோக்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க ஆவலோடு இருக்கின்றனர். இந்த சீசனும் மிகவும் சிறந்த சீசனாக அமையும் என்றார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது டி20 லீக் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

summary

The International Masters League cricket series will begin in October.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.